தரங்கம்பாடி, செப்.18- நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனா ர்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை எம்.எல்.ஏ பவுன்ராஜ் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் திருக்கடையூரில் ரூ.6.50 லட்சத்தில் அங்கன்வாடி மையத்தையும், நடுக்கரை ஊராட்சியில் ரூ.8.70 லட்சத்தில் அங்கன்வாடி மையத்தையும், எடுத்துக்கட்டி ஊராட்சியில் ரூ.17.64 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறை கட்டிடத்தையும், ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் எம்.எல்.ஏ திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் எஸ்.தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சி) அருண், உதவி பொறியாளர்கள் கே.விஜயன், என்.சோமசுந்தரம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நல்லமுத்து, ஜனகர், ஊராட்சி செயலாளர்கள் பரமேஸ்வரி, முருகானந்தம், வெங்கடேசன், வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.