tamilnadu

img

கொள்ளிடம்- நாகை 4 வழிச் சாலைக்காக விவசாயிகளை மிரட்டி நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் முயற்சி

தரங்கம்பாடி, ஜூன் 29- நாகை மாவட்டம் கொள்ளிடம் முதல் நாகை வரை விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் மிக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில் பல்வேறு கட்ட போராட்டங்க ளை நடத்தி வந்த நிலையில் நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என வலியுறுத்தி 35-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், மக்கள் ஆக்கூர் முக்கூட்டில் காத்திருப்பு போராட்டத்தில் சனியன்று ஈடுபட்டனர். காவிரி டெல்டா பகுதியின் விவசா யத்தை பாழாக்கி இயற்கை வளங்களை உறிஞ்சி அதை பிற பகுதிகளுக்கு எளி தாக எடுத்து செல்வதற்காக 4 வழிச் சாலை அமைப்பதற்காக கொள்ளிடம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, பொறையார் உள்பட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஏக்கர் விளை நிலங்க ளை சதுர அடி 3, 5 ரூபாய்க்கும் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி அதிகாரிகள் அப்பாவி விவசாயிகளை மிரட்டி நிலங்க ளை அபகரிக்க முயன்று வருகின்றனர். அதிகாரிகளின் இச்செயலை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திய நிலையிலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் காவல்துறை துணை யோடு போராட்டத்தில் ஈடுபடும் விவ சாயிகளை மிரட்டி வருகிறது. இந்நிலை யில் தங்கள் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என்று கூறி ஆக்கூர் முக் கூட்டில் நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நில உரி மையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை யை ஏற்று திட்டத்தை கைவிடவில்லை யெனில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.  விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது போல் காட்டிக் கொண்டு நான்கு வழிச்சாலை திட்டத்தின் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆதரவாக செயல் படும் அரசு அதிகாரிகள் குறித்து போராட்ட பந்தலில் பேனரும் வைக்கப்பட்டது.