நாகப்பட்டினம், அக்.19- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகை மாவட் டப் போராட்ட ஆயத்த மாநாடு, புதன்கிழமை நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலை வர் வி.தேன்மொழிதலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் என்.ராஜேந்தி ரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கே.இராஜூ கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் துவக்கவு ரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் என். புகழேந்தி, எம்.இளங்கோ, வி.ரேணுகா, கே.பாலாம்மாள் மற்றும் ஒன்றிய நிர்வாகி கள் கே.சண்முகம், வி.ஜெய ராமன், சி.கலியபெருமாள், எஸ்.முருகையன், சி.ஜோதி லட்சுமி ஆகியோர் கருத்து ரையாற்றினர். வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன் வாழ்த்துரை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ஜெ.சசிகலா நிறை வுரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 25 குழந்தைக ளுக்குக் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் எஸ். துர்க்காம்பிகா நன்றி கூறினார்.