நாகப்பட்டினம், ஜூன் 28- கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களைத் தனிமைப்ப டுத்தி, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மயிலாடு துறை, மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியின் சில பகுதி களிலும் கல்லூரி வளாகத்திலும் தனி வார்டுகள் அமைக்கப் பட்டன. நாகை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செய லாளருமான சி.முனியநாதன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் உள்ளிட்டோர் ஏ.வி.சி. கல்லூரி வளாக கொரோனா சிகிச் சையளிக்கும் வார்டுகளை ஆய்வு செய்தனர். மேலும், மயி லாடுதுறை அரசு, பெரியார் மருத்துவமனையையும், மயிலாடு துறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடங்களை யும் ஆய்வு செய்தனர்.