tamilnadu

நீண்டகாலமாக சாலை வசதியில்லாத வெள்ளைமணல் மீனவக் கிராமம்

சீர்காழி, அக்.4- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் வெள்ளைமணல் கிரா மம் உள்ளது. இங்கு 400 க்கும் மேற்ப ட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகிய வை உள்ளன.  இக்கிராமத்தில் முழுக்க முழுக்க மீனவர்களே வசித்து வருகின்றனர். கொ ள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள இந்த கிராமம் கடற்கரையிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. சுதந்திரம் அடை ந்த காலத்திலிருந்து இந்த கிராம த்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வில்லை. இக்கிராமத்திற்குச் செல்லும்  பாதை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் சாலை வசதியின்றி கரடு முரடான பாதையில் மக்கள் சென்று வந்தனர். இதுகுறித்து பலமுறை இக்கிராம மக்கள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தியும் வன த்துறையினர் சாலை அமைக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் மழைக்கால த்தில் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வனத்துறை அனுமதி
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று சீர்காழி எம்.எல். ஏ.,பாரதி, வனத்துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து வெள்ளமணல் கிராமத்துக்கு செல்ல ஒரு கிமீ தூரத்துக்கு முதலில் சாலை அமை க்க தற்பொழுது வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதனைத் தொட ர்ந்து சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, வெள்ளைமணல் கிராமத்துக்கு நேரில் சென்று புதிதாக சாலை அமைய இரு க்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறுகையில், இக்கிரா மத்தின் நீண்டகால கோரிக்கையான சாலை அமைக்கும் பணிக்கு ஒரு கிமீ தூரத்துக்கு சாலை அமைத்துக் கொள்ள  வனத்துறை அனுமதி வழங்கியுள்ள தையடுத்து வரும் ஜனவரி மாதம் சாலை  அமைக்கும் பணி துவங்கும் என்றார்.  சீர்காழி நிளவள வங்கித்தலைவர் நற்குணன், ஒன்றிய ஆணையர் சரவ ணன், பி.டி.ஓ ஜான்சன், துணை வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் கோபால கிருஷ்ணன், சம்மந்தம் ஊராட்சி செயலா ளர் மாரிமுத்து, கிராமத்தலைவர் பாண்டி யன், துணைத்தலைவர் விஜயபாரதி மற்றும் பலர் உடனிருந்தனர்.