தரங்கம்பாடி, ஜன.30- நாகை மாவட்டம், செம்பனார் கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா செவ்வாய், புதன் இரு தினங்கள் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைமகள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் குணசேகரன், செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபன், ஐசிஐசிஐ வங்கி மேலாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளி வந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.