tamilnadu

img

கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு

3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 20- தேனி மாவட்டம் கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் சம்பவத்தின் போது பணிபுரிந்த காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர்களை குற்றவாளியாக சேர்க்கக் கோரிய வழக்கை தள்ளு படி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம்  டி.கள்ளிப்பட்டி அம்பேத் கார் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணி புரிந்தார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்    ஓ.ராஜா உட்பட பலர் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவத்தின் போது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களாகப் பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப் பாண்டியன் ஆகியோரை குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளு படி செய்யப்பட்டது.  இந்த நிலையில் இந்த மனுவின் மீது மீண்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது மேலும் மனுதாரர் காலதாமதமாக மனு தாக்கல் செய்துள்ளார் .எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்தோம். நாகமுத்து தற்கொலை குறித்து விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை மூன்று மாதங்க ளுக்குள்  முடிக்க வேண்டுமென வெள்ளியன்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.