tamilnadu

img

தரங்கம்பாடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

 தரங்கம்பாடி, அக்.2- நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தையொட்டி 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையில் புதனன்று நடை பெற்றது. பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள 2 பசுமை வாகனங்களை அறிமுகப்படுத்தி, அதன் சேவையையும் எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பேரூராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.  சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன், அலுவலக ஊழி யர்கள், லயன்ஸ் சங்கத்தினர், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தியடிகளின் உரு வப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.