தரங்கம்பாடி, மார்ச் 4- நாகை மாவட்டம் செம்ப னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை மக்கள் தொகை அடிப்படையில் இர ண்டாக பிரிக்க வேண்டு மென இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோ ரிக்கை மனு அளித்துள்ளார். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அர சின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், தரங்க ம்பாடி- மயிலாடுதுறை ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்க மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொ ண்டு செல்ல வேண்டும், மக்கள் தொகை அடிப்படை யில் பெரிய செம்பனார்கோ வில் ஒன்றியத்தை இர ண்டாக பிரித்து தரங்கம்பா டியை ஒன்றியமாக அமை க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை கொ ண்ட ஊராட்சி பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க நடவடி க்கைகள் எடுக்க வேண்டும், பொறையார் உள்ளிட்ட அனைத்து அரசு பணிமனை களிலிருந்தும் தங்கு தடை யின்றி மக்கள் பயன்பா ட்டிற்கு பேருந்துகள் அனை த்தும் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும். ஆயப்பாடி அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய த்தை அரசு மருத்துவம னையாக தரம் உயர்த்தி முழு நேர மருத்துவரை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஆயப்பாடியில் மக்கள் நலன் கருதி தேசிய வங்கி அமை க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பொறையார் பேருந்து நிலையத்திற்குள் பாண்டி, சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் உள்ளி ட்ட பல்வேறு மக்கள் நல னுக்கான நீண்ட நாள் கோரி க்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் முஜிபுர் ரஹ்மான் அளித்துள்ளார்.