தரங்கம்பாடி, பிப்.9- நாகை மாவட்டம் தரங்க ம்பாடி வட்டம் இலுப்பூர் தியாகி வீ.கோவிந்தராஜின் 37 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சனிக்கி ழமை இலுப்பூர்-சங்கர ன்பந்தல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவ ட்டக்குழு உறுப்பினர் டி.இரா சையன் தலைமையில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, மாவட்ட செயலா ளர் நாகைமாலி, வட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். வட்டக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், மாதர், வாலி பர், மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் தரங்கம்பாடி வட்டக்குழு சார்பில் இரண்டாம் கட்ட கட்சி நிதியாக 93 ஆயிரத்து ரூபாயை வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி ஆகியோரிடம் வழங்கினார்.