tamilnadu

img

பள்ளிவாசலை சீரமைக்க நிதியுதவி வழங்கிய இந்து சகோதரர்

தரங்கம்பாடி ஜூலை 29- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நீலவெலி கிராமத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல் கட்ட டத்தை சீரமைக்க இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் நிதியுதவி அளித் துள்ள சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என எந்தவித பாகுபாடின்றி சகோதரத்துவமாய் வாழ்ந்து வருவதற்கு அடை யாளமாய் இந்நிகழ்ச்சி நடந்துள் ளது.  நல்லாடை அருகேயுள்ள பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பொறியாளர் அய்யப்பன் சிங்க ராசு, தொழிலதிபரான இவர் சென் னையில் வசித்து வருகிறார். பல் வேறு சமூக சேவைகளை செய்து வரும் அய்யப்பன் தனது பிறந்த நாளையொட்டி திங்களன்று தனது சொந்த ஊரான பனங்குடியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த தம்பதி யினருக்கு திருமணத்தை தனது சொந்த செலவில் செய்து வைத்தார். பின்னர் நீலவெளி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் சீரமைப்பு பணிகளை செய்ய நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பள்ளிவாசல் இமாம், ஜமாத் தார்கள் பஷீர் அகமது, உபயத் துல்லா, ஷேக் அலாவுதீன், ஹிதி ருதீன், சாதிக்பாட்ஷா மற்றும் ஜெய காந்தன், பி.எஸ்.அய்யப்பன் மற் றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர். பள்ளிவாசல் முன்பு நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மதப் பிரிவினையை விதைக்கும் நபர்களுக்கு மத்தியில் இஸ்லா மியர்களின் புனிதமான இடமான பள்ளிவாசலை சீரமைக்க இந்து சகோதரர் நிதியளிப்பதை பலரும் பாராட்டினர்.   அதனைத் தொடர்ந்து காரு குடி, கொங்கோனோடை, நல்லாடை ஆகிய அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை அய்யப்பன் வழங்கி பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பனங்குடியில் 1008 நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.