tamilnadu

img

மாணவர்களை டைனிங் டேபிளில் அமர வைத்து மதிய உணவு சாப்பிட வைக்கும் ஆச்சரியப் பள்ளி

தரங்கம்பாடி, ஆக.21- மதிய உணவு உண்பதெற்கென எந்த ஒரு வசதியும் இல்லாமல் மாண வர்கள் மரத்தடியிலும், மைதானங்களி லும் உணவை சாப்பிடும் பள்ளிகளைத் தான் நம்மால் அதிகளவில் காண முடியும்.  நவீன சமையற்கூடத்தில் உணவை தயாரித்து டைனிங் டேபிளில் காலாட்டிக் கொண்டு ஹோட்டல்களில் உணவு உண்பது போல மதிய உணவை சாப்பிடும் ஆச்சரியமான பள்ளியாக செயல்படுகிறது தரங்கம்பாடியில் உள்ள தமிழ் சுவிசேஷச லுத்தரன் திருச்சபையால் அரசு உதவியுடன் செயல்படும் பிஷப் ஜான்சன் மேல் நிலைப்பள்ளி.  தமிழறிஞர் சீகன் பால்குவால் 1706-ல் அவர் தரங்கம்பாடி வந்த சில மாதங்களில் ராஜ வீதியில் தொடங் கப்பட்ட இப்பள்ளி 1714-ல் அட்மிரல் தெருவில் அவரது வீட்டின் அருகி லேயே தொடர்ந்து இயங்கி வருகிறது. தனது மனைவி மரியா டாரத்தியுடன் இணைந்து சீகன்பால்கு இப்பள்ளியை நடத்தியதோடு, விதவை பெண்களை ஆசிரியர்களாக நியமித்து பெண்களுக் கான பள்ளியாகவும் நடத்தினார். பெண்களை அடிமையாக நடத்திய காலக்கட்டத்தில் பெண்களும், தாழ்த் தப்பட்ட- ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களும் கல்வியறி வைப் பெற நடத்திய இப்பள்ளியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளும் கற்பிக்கப்பட்டுள் ளன. டேனிஷ் ஆட்சிக்கு பிறகும் பிரிட்டிஷ் காலத்திலும் இடைவிடாத கல்விப் பணியை போதித்த இப்பள்ளி, பல நூற்றாண்டுகளை கடந்து 315-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள் ளது.  ஏழை, எளிய, மீனவ மக்களின் கல்விக் கோவிலாக உள்ள இப்பள்ளி யில் எந்தவித கல்வி கட்டணமும் மாண வர்களிடம் பெறப்படாமல் இலவச மாகவே திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கல்வியளிக்கப்படுகிறது. இயற்கை கொஞ்சும் அழகிய கட்டமைப்போடு உள்ள இப்பள்ளியில் மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சும் வகை யிலான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், நவீன கழிப்பறைகள் என காண்போரை வியக்க வைக்கும் வகையில் இப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் அடுத்த ஆச்சரியமாக மதிய உணவு சாப்பிடும் மாணவர் களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என்ற நல்நோக்கத்தில் நவீன சமையற்கூடமும், டைனிங் டேபிள்கள் அமைக்கப்பட்ட டைனிங் ஹால் ஆகியவற்றை அமைத்துள்ள னர். நவீன சமையற்கூடம் மற்றும் டைனிங் ஹால் ஆகியவற்றை த.சு. லு.தி நிர்வாகி ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கட்ராமன் திறந்து வைத்தார். பள்ளி தாளாளர் ஜீ.வி.பாண்டியன், தலைமையாசிரியர் ஜான் சைமன், பள்ளி ஆசிரியர்கள், அலு வலர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். (நமது நிருபர்)