tamilnadu

பாதியில் நிறுத்தப்பட்ட அரசு கான்கிரீட் வீடுகளை கட்டி முடிப்பது எப்போது? ஒன்றிய ஆணையரிடம் கவுன்சிலர் புகார்

சீர்காழி, ஜுலை 9- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியைச் சேர்ந்த தாழைஇருதய நகரில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் 15 கான்கிரீட் வீடுகள் கட்டத் தீர்மானிக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் சார்பில் துவங்கி, கட்டு மான வேலைகள் நடைபெற்றன.  சில தினங்கள் நடைபெற்று வந்த கட்டு மான பணி எந்தக் காரணமுமின்றி பாதியி லேயே நிறுத்தப்பட்டுள்ளது. 5 அடி உயரம் முதல் 8 அடி உயரம் வரை மட்டுமே சுவர்கள் எழுப்பப்பட்டன. மேற்கூரை அமைக்கும் பணி  நடைபெறவில்லை. பணி நிறுத்தப்பட்டு 4 வரு டங்களுக்கும் மேலாகியும் அப்படியே கிடப் பில் போடப்பட்டுள்ளது.  இதுகுறித்து திருமுல்லைவாசல் கிரா மத்தை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் பூவ ரசு கூறுகையில், தாழைஇருதய நகரில் கடந்த  2016 ஆம் ஆண்டு கான்கிரீட் வீடுகள் கட்டும்  பணி துவங்கி முடிவடையாமல் நிறுத்தப்ப ட்டுள்ளது. பணி நிறைவு பெறாமலேயே 15 வீடு களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழு மையும் எப்படியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடு கட்டிக் கொள்ள தகுதி யுடைய ஏழை-எளியவர்கள் சமுதாய கூடத் தில் குடியிருந்து வருகின்றனர். எனவே ஏழை குடும்பங்களை சேர்ந்த பய னாளிகளுக்கு நிறுத்தப்பட்ட அரசு கான்கிரீட் வீடுகளை உடனடியாக கட்டித் தர நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து கொ ள்ளிடம் ஒன்றியம் ஆணையர் இளங்கோ வன், பி.டி.ஓ.ஜான்சன் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.