tamilnadu

img

கிராமசபை கூட்டங்கள்  

சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் பச்சைபெருமாநல்லூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஜி. தனம் தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் பி. சத்தியா முன்னிலை வகித்தார். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் அனைத்து வார்டுகளுக்கும் செல்ல குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதே போல் ஆரப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வனிதாமுருகானந்தம் தலைமை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலழகன் முன்னிலை வகித்தார். ஒன்றியக் குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ரீகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சீனிவாசன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடிநீர் குழாயை யாராவது உடைத்தால் ரூ 1500 அபராதம் விதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   

;