சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை வகித்தார். துணை முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் கபாலிமாணிக்கம் சிறப்புரையாற்றினார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் துறை ரீதியாக சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. துறைத்தலைவர்கள் வெங்கட்ரமணி, பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், கீதா, ரவிக்குமார், திட்ட அலுவலர்கள், தாமரைச்செல்வி, வெங்கடேஷ், வேலை வாய்ப்பு அதிகாரி பிரேம்நாத், சீர்காழி ஊரக வளர்ச்சி வங்கித் தலைவர் நற்குணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் ஆரோக்யராஜ் நன்றி கூறினார்.