சீர்காழி, டிச.8- மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப் பட்டது. இதில் திருவாரூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய மூன்று மாவட்டங்களிலலருந்து 50 க்கும் மேற்பட்ட பள்ளி கள் கண்காட்சியில் கலந்து கொண்டன. இதில் சீர்காழி எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளி மாண வர்கள் தங்கள் பள்ளியின் மாடித் தோட்டத்தினைப் பற்றிய திட்ட அறிக்கையுடன் மாடித் தோட்டப் பயிர்களையும் கண்காட்சியில் வைத்தனர். இது அனைவரிடமும் சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்திலும் சிறந்தது என மாடித் தோட்ட ஆய்வு தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் புகழேந்தி மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் விளக்கமும் அனைவரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அறிவியல் ஆசிரியர் தமிழ்வாணன் வழிகாட்டுதலும் இதற்கு ஊக்க மாக அமைந்தது. பரிசு பெற்ற மாணவர்களை பள்ளிச் செய லர் இராமகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் தங்கவேலு, பள்ளி முதல்வர் தங்கதுரை ஆகியோர் பாராட்டினர்.