tamilnadu

img

டிசம்பர் வரை ரேசனில் இலவச பொருள்கள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 18- டிசம்பர் வரை ரேசன் கடை களில் பொருள்கள் விலையின்றி வழங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 41 இடங்களில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கீழை யூர், வாழக்கரை, மேலவாழக் கரை இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்டச் செயலாளர் த.லதா, துணைத் தலைவர் கே.டி.எம். சுஜாதா பங்கேற்று விளக்கவுரை யாற்றினர். டி.மணல்மேட்டில் ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஜி.கலைச் செல்வி சிறப்புரையாற்றினார். திருவிளையாட்டத்தில் ஆர்ப் பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வி.வெண்ணிலா விளக்கவுரை யாற்றினார். ராதாமங்கலம் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி உரையாற்றினார்.