சீர்காழி, ஜூலை 25- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொட்டாய்மேடு மீனவர் கிராமத்துக்கு செல்ல பக்கிம்காம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டி ருந்த பழைய பாலம் உடைந்துவிட்டதால், அது தற்காலிமாக சரி செய்யப்பட்டது. இந்நிலையில் புதிதாக ரூ. 3 கோடி மதி ப்பீட்டில் நபார்டு திட்டத்தில் பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வன த்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி பாலம் கட்ட தடை விதித்தனர். ஆனால், இது வரை வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழ ங்கவில்லை. எனவே வனத்துறையினரைக் கண்டி த்தும் உடனடியாக பாலம் கட்ட வலியுறுத்தி யும் கொட்டாய்மேடு கிராமத்தில் உள்ள 12 விசைப்படகுகள், 100 பைபர் படகுகள் மற்றும் 100 மரப்படகுகள் மூலம் வெள்ளியன்று கட லுக்குள் மீன்பிடிக்க செல்வதை புறக்க ணித்து, புதிய பாலம் கட்ட இருக்கும் இடத்தில் அமர்ந்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்த னர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதியளித்தார். பின்னர் அனை வரும் கலைந்து சென்றனர்.