தரங்கம்பாடி, மே 16- நாகை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள மேலப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்க ளுக்கு பூமி குழுமம் சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. பூமி குழுமம் சார்பில் மேலப்பெரும்பள்ளத்தில் உள்ள அந்நிறுவனத்தில் சனியன்று நடை பெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொழிலதிபர்கள் பா.ஜெயக் குமார், சங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊராட்சி தலைவர் தேவி சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பி னர்கள், பூமி குழும பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.