நாகப்பட்டினம், ஜூலை 28- தமிழக நாட்டுப்புறக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும் கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகை யில், இசைக்கருவிகள், ஒப்பனை ஆடை, அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலை ஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5000 வீதம், 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொ ன்றுக்கும் ரூ.10,000 வீதம் 100 கலைக்கு ழுக்களுக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும். தனிப்பட்ட கலைஞரின் வயது 31.3.2020 தேதியில் 16 வயது நிரம்பியராகவும் 30 வய துக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தைப் பதிவு செய்திருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இலவ சமாக வழங்கப்படும். அஞ்சல் மூலம் விண்ண ப்பம் பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்கு ழுக்கள் சுய முகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான அஞ்சல் தலை ஒட்டி, உறுப்பினர்- செய லாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், எண் 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600028 என்னும் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.7.2020 வெள்ளிக்கிழமை மாலை 5.45.மணி க்குள் அல்லது அதற்கு முன்னரோ மேலே தெரி விக்கப்பட்டுள்ள மன்றத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப ங்களை மன்றத்தில் நேரிலும் அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.