மயிலாடுதுறை, செப்.2- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னன்பந் தல் ஏ.வி.சி. கல்லூரித் தமிழாய்வுத் துறையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையும் இணைந்து நடத்திய நாட்டுப்புறவியல் களஆய்வு நெறி முறைகள் செயலரங்கு நிறைவு விழா நடந்தது. செயலரங்கின் தொடர் அமர்வில், ஆறு.இராமநாதன், முனைவர்கள் இ.முத்தையா, ஆ.தனஞ்செயன், பீ. நசீம்தீன், ச.பிலவேந்திரன் உரையாற்றினர். மேலும் பேரா சிரியர்கள் தலைமையில் பத்துக் குழுக்கள் மயிலாடுதுறை சுற்று வட்டார பத்து இனக் குழுக்கள் வாழும் பகுதிக்குச் சென்று வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளைச் நேரடி யாக சேகரித்தனர். செயலரங்கின் நான்காம் நாளின் ஐந்தாம் அமர்விற்கு முனைவர் அ.சண்முகம்பிள்ளை தலைமை வகிக்க கள ஆய்வு குழு சார்பில் முனைவர்கள் சு.இரமேஷ், செம்பொன்.மாதவன், கு.சக்திவேல், செல்வ.கனிமொழி, இரா.மஞ்சுளா ஐந்து கட்டுரை முன்வரைவுகள் வாசிக்கப் பட்டன, டாக்டர் தி.நடராஜன் தலைமையில் ஆறாம் அமர்வு நடைபெற்றது இதில் முனைவர்கள் ச.அருள், இரா.கௌரி, இரா.தேவேந்திரன், நா.இராஜ்குமார், செ. செந்தில்பிரகாஷ் கட்டுரை முன்வரைவு வழங்கினர். நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புற வியல் தலைவர் ஆர்.காமராசு தலைமை வகித்தார். உத விப் பேராசிரியர் க.கோப்பெருந்தேவி, ஆய்வாளர் சிவ.உதயசுந்தர், முதுகலை மாணவர் அ.அன்புநிதி ஆகியோர் பேசினர். கல்லூரி செயலர் கே.கார்த்தி கேயன், செயலரங்கில் களப் பணியாற்றிய பேராசிரி யர்களுக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பூம்புகார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அ.கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார். நாட்டுப்புறவியல் உதவிப் பேராசிரியர் சீ.இளைய ராஜா வரவேற்றார் தமிழாய்வுத்துறை உதவிப் பேரா சிரியர் தெ.திருமுருகன் நன்றி கூறினார். தமிழாய்வுத் துறை தலைவர் சு.தமிழ்வேலு கருத்தரங்கப் பணிகளை ஒருங்கிணைத்தார். முனைவர்கள் சு.விமல்ராஜ், பூ.வெற்றி வேலன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்துத்துரைத்தனர். கருத்தரங்கிற்கான பணிகளை முனைவர்கள் செ.செந் தில்பிரகாஷ், இரா.தேவேந்திரன் மற்றும் அலுவலக உதவி யாளர் கோ.பாலமுருகன் ஆகியோர் செய்தனர்.