தரங்கம்பாடி, ஜூன் 14- நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள பாலையூர் காவல் நிலை யத்துக்கு விசாரணைக்காக அழை த்து செல்லப்பட்ட இளைஞர் வீட் டிற்கு வந்து தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட தற்கு காரணமான ஆய்வாளர் வேலு தேவி மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாலையூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. குத்தாலம் அருகேயுள்ள பாலை யூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லா வூர் கீழத்தெருவில் வசித்து வரும் ரெங்கநாதன் என்பவரின் மகன் முரளி இவருக்கு வயது 26. அதே ஊரைச் சேர்ந்த மாதவன் த/பெ லோகநாதன், கோவிந்தராஜன் ஆகியோர் பாலை யூர் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர் குழுவில் பணியாற்றுகின்ற னர். இதனிடையே அதே பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கும் மாதவ னுக்கும் இடம் பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்படுகிறது. ஏற்கனவே மாத வனுக்கும் முரளிக்கும் உள்ள முன் விரோதம் காரணமாக முரளியை இப் பிரச்சனை சம்பந்தமாக விசாரிக்க சொல்லி ஆய்வாளர் வேலுதேவி யிடம் கூறியுள்ளார். அதன்பேரில் 4.6.2020 அன்று இரவு பாலையூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆய்வாளர் விசா ரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில் மறுநாள் ஜூன் 5 அன்று வீட்டி லிருந்த முரளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அப்பாவி இளைஞரை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்று என்ன சொல்லி மிரட்டினாரோ? என கதறிய அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து மயிலாடுதுறை மருத்துவ மனை முன்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். இளைஞர் தற்கொலைக்கு கார ணமான ஆய்வாளர் வேலுதேவி மீது கொலை வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். தற் கொலை குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும். போலீஸ் நண்பர் குழுவில் பணியாற்றும் மாதவன், கோவிந்தராஜன் ஆகியோர் பெயரை யும் கொலை வழக்கில் சேர்க்க வேண் டும் என வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தற்கொலை க்கு நீதி கேட்டு உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு முரளியின் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில் அப்பாவி இளைஞ ரின் தற்கொலைக்கு காரணமான ஆய்வாளர் வேலுதேவி மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில் பாலையூர் காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான வீ.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், ஜி. ஸ்டாலின், எஸ்.துரைராஜ், சி.வி.ஆர். ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், பி. மாரியப்பன், மயிலாடுதுறை வட்டச் செயலாளர் சி.மேகநாதன் உள்பட கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட முரளியின் குடும் பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். முரளியின் குடும் பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தற் கொலைக்கு காரணமான ஊர்காவல் படையை சேர்ந்த மாதவன், கோவிந்த ராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.