tamilnadu

img

மின் கேங்மேன்  தேர்வு பயிற்சி முகாம்

 

தரங்கம்பாடி, ஜன.19- நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கேங்மேன் எழுத்து தேர்வுக்கான பயிற்சி முகாம் ஆர்.ஓ.ஏ கட்டிடத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ். சிவராஜன் தலைமையில் நடைபெற்ற முகாமில் மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின், மாநில துணைத் தலைவர்கள் ரெங்கராஜன், இராஜாராமன், திட்ட செயலாளர் எம்.கலைச்செல்வன், மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில துணை தலைவர் ஆர்.கல்யாண சுந்தரம், நாகை திட்ட செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உரை யாற்றினர். மின்சார பாதுகாப்பு மற்றும் முதலுதவி, பொது அறிவு உள்ளிட்ட பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. அமைப்பின் நிர்வாகிகள் தேவக்குமார், குமார், வெற்றிவேல், ஆர்த்தி, ஜெயலெட்சுமி ஆகியோர் முகாமை ஒருங்கிணைப்பு செய்தி ருந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்று பய னடைந்தனர். நிறைவாக எம்.மணிமேகலன் நன்றி கூறி னார்.

;