தரங்கம்பாடி, மார்ச் 8- நாகை மாவட்டம் இலுப்பூர் கடைவீதி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வட்டத்தலைவர் வீ.எம்.சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ராக அமைதியாக போராடிய இஸ்லாமி யர்கள் மீது தாக்குதல் நடத்திய மதவெறி குண்டர்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செய லாளர் எஸ்.பாலா, மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் கே.பி மார்க்ஸ், வட்ட நிர்வாகிகள் பவுல் சத்திய ராஜ், சாமித்துரை கண்டன உரையாற்றி னர். மதவெறி தாக்குதலை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லா மியர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.