நாகப்பட்டினம், அக்.22- நாகப்பட்டினம் நகராட்சிக்குப் பகுதிகளில் நிலவும் சுகாதாரச் சீர் கேட்டைக் கண்டு கொள்ளாத நக ராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திங்கட்கிழமை, நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட தியாகராஜ புரம், அண்ணாநகர், பச்சைப் பிள்ளை யார் கோயில்தெரு, தாமரைக்குளம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாக்க டைக் கால்வாய்களைத் தூர்வாரி, குவிந்து கிடக்கும் குப்பைகளை தின மும் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் நகரப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுத்து, டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் த.லதா தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பி னர் என்.அமிர்தம் கோரிக்கை விளக்க வுரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் ஜி.வெண்ணிலா, மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி மற்றும் மாவட்ட- ஒன்றிய- நகர நிர்வாகிகள் ஜி. ராஜேஸ்வரி, பபிதா, பி.முத்தம்மாள், எஸ்.விமலா, எஸ்.அம்பிகா, கே. ராதிகா, ஆர்.தனலெட்சுமி, கே.ராதிகா, ஆர்.தனலெட்சுமி, எம்.பக்கிரியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி ஆணையருடன் மாதர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில், மிக விரைவில் அனைத்துக் கோரிக் கைகளையும் நிறைவேற்றி வைப்ப தாக நகராட்சி ஆணையர் உறுதி யளித்தார்.