tamilnadu

img

அம்பேத்கர் சிலை உடைப்பு சமூக விரோதிகள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழி/திருத்துறைப்பூண்டி, ஆக.28- வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு சீர்காழி லாயர்ஸ் அசோசியசன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீர்காழி லாயர்ஸ் அசோசியசன் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர்  கணேசமூர்த்தி, பொருளாளர் நெடுஞ்செழியன், இணைச் செயலாளர்கள் வினோத், ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கண்டன உரையாற்றினர்.
திருத்துறைப்பூண்டி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் நகரக் குழு செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ்.சாமிநாதன், நகரக்குழு உறுப்பினர்கள் கு.வேதரெத்தினம், கே.கோபு, எஸ்.தண்டபாணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கதாக.அரசுதாயுமாணவன், வழக்கறிஞர் வி.வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;