tamilnadu

img

ஊரடங்கால் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.7500 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 3- ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வாடும் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.7500- வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் திங்கட் கிழமை 36 மையங்களில் போ ராட்டம் நடைபெற்றது. கீழையூர் ஒன்றியம், மேல வாழக்கரையில் நடைபெற்ற போ ராட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் த.லதா தலைமை வகித்தார். கீழ்வேளூர் ஒன்றியம், ராதாமங்கலத்தில் சங்க கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சுபா தேவி தலைமையேற்றார். கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் ஒன்றி யச் செயலாளர் கே.டி.எம்.சுஜாதா தலைமையில் போராட்டம் நடை பெற்றது. திருவிளையாட்டத்தில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.வெண்ணிலா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திருமெய்ஞானத்தில் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.கலைச் செல்வி தலைமை வகித்தார்.