தரங்கம்பாடி, மே 20-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான, மயிலாடுதுறையில் வாழ்ந்து, மக்கள் பணியாற்றிய தோழர் கோ.பாரதிமோகனின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது.நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வட்ட செயலாளர் சி.மேகநாதன் தலைமையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், ஸ்டாலின், துரைராஜ், சி.வி.ஆர்ஜீவானந்தம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.