tamilnadu

img

கல்லூரி கருத்தரங்கம்

 மயிலாடுதுறை, ஆக.10- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரி விலங்கியல் மற்றும் வன உயிரியியல் துறையின் வன உயிரியல் அறிவியல் மன்றம் சார்பில் இரண்டு நாள் கோடை கால ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை ஒருங்கிணைப்பாளர் ஜி.சர்மிளா முன்னிலை வகித்தார். இரண்டாம் ஆண்டு வன உயிரியியல் துறை மாணவர்கள், அசாம், கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் கோடை கால ஆராய்ச்சிகளை நேரடியாக மேற்கொண்டனர். அங்கு பயின்ற அனுபவங்களை கருத்தரங்கில் எடுத்துரைத்தனர். மேலும் பல வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறை, அவை எதிர்நோக்கும் இடர்ப்பாடு, அவைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை விளக்கி கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வன உயிரியல் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயக்குமார் செய்திருந்தார். மாணவி சோபியா நன்றி கூறினார்.