tamilnadu

தென்னை மரக்கன்று வழங்கும் விழா

சீர்காழி, ஜன.23- நாகை மாவட்டம் சீர்காழி அருகே சீயா ளம் கிராமத்தில் அனைத்து குடும்பத்தின ருக்கும் தென்னை மரக்கன்றுகள் மட்டும் திசு வாழைக்கன்றுகள் வழங்கும் விழா, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. ஊரா ட்சித் தலைவர் இளவரசன் வரவேற்றார். தொழிலதிபர் சகாதேவன், ஒன்றிய தி.மு.க அவைத்தலைவர் ராஜேந்திரன், கொள்ளி டம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் விமலாசுதாகர், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தனர்.  விழாவில் 2 ஆயிரம் தென்னை மரக்கன்று மற்றும் 2 ஆயிரம் திசு வாழைக் கன்று வழங்கப்பட்டது.

;