tamilnadu

img

சோழவித்தியாபுரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள் படத்திறப்பு

நாகப்பட்டினம், ஆக.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சோழவித்தியாபுரம் தோழர் ஆர்.முத்துப்பெருமாள்  31.07.2019. அன்று காலமானார். அவரது உருவப் படத்திறப்பு நிகழ்ச்சி, சோழவித்தியாபுரம் அவரது இல்லத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி தலைமை வகித்தார். சி.பி.எம்.மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், தோழர் முத்துப்பெருமாள் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.   அதிமுக சார்பில் பாலை கே.எஸ்.எஸ்.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.வேதையன், சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் டி.செல்வம், பேராசிரியர் எஸ்.பி.கணபதி, சி.பி.எம்.சார்பில் ச.தமிழ்ச்செல்வம், எம்.தன்ராஜ், எம்.நடராஜன், நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, டபிள்யு.ஜான், கே.சித்தார்த்தன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.அப்துல்அஜீஸ், கே.கிருஷ்ணன், ஆர்.ஜீவானந்தம், ப.சுபாஷ்சந்திரபோஸ், பி.டி.பகு, ஏ.வேணு, பி.கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.வி.ஆர்.ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், பி.சீனிவாசன், வி.தொ.ச.மாநிலப் பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், வி.ச.மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தோழர் ஆர்.எம்.சேவைகளைப் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். சி.பி.எம்.மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் நிறைவுரையாற்றுகையில், “தோழர் ஆர்.முத்துப்பெருமாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கீழையூர் ஒன்றியச் செயலாளர், கடலோரப் பிரதேசக் குழுச் செயலாளர், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சோழவித்தியாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் வங்கித் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஏற்று இயக்கத்திற்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்திருக்கிறார். சி.பி.எம். மாநிலக்குழு மற்றும் வி.தொ.ச. மாநிலக்குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைச் சமர்ப்பிக்கிறேன்”என்றார்.  சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் நன்றி கூறினார். தோழர் ஆர்.முத்துப்பெருமாள் உருவப் படங்களை அவரது உறவினர்களுக்கு ஏ.லாசர், நாகைமாலி, எம்.முருகையன் ஆகியோர் அளித்தனர்.