tamilnadu

img

வேதாரணியம் முள்ளியாற்றுக்கு வந்த காவிரி நீர் 

 நாகப்பட்டினம், செப்.9- காவிரிச் சமவெளியின் கடைசிக் கடைமடைப் பகுதி நாகை மாவட்டத்திலுள்ள வேதாரணியம் வட்டமாகும். இப்பகுதிகளில் கடலில் கலக்கும் அரிச்சந்திரா போன்ற பெரிய ஆறுகளும் சிறிய ஆறுகளும் உள்ளன. மணற் கொள்ளை போன்ற பல்வேறு காரணங்களால் எல்லா ஆறு களும் வரண்டு போய் விட்டன. நதிகள் பொய்த்து, வறண்டு போனதற்குப் பின், சிற்றாறுகளிலும் வாய்க்கால்களிலும் நீரைப் பார்ப்பது என்பதே கனவாய்ப் போனது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுக்காலத்தில், இவ்வாண்டையும் சேர்த்துச் சரியாக 43 ஆண்டுகள் தான் மேட்டூர் அணையின் கொள்ளளவான 120 அடியின் நிறை யளவை அடைந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கல்லணையிலிருந்து 17-ஆம் தேதி காவிரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டு களாய்க் காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு வராததால், காவிரிப் படுகையில் சம்பா சாகுபடி என்பது பொய்த்துப் போனது. கர்நாடாகாவில் கனமழை பெய்து, அணைகளில் நீரைத் தேக்கி வைக்க முடியாமல், மிகுதியான நீரை அப்படியே திறந்து விடுகிறார்கள்.  தற்போது, மேட்டூருக்கு ஓடிவரும் மிகுதியான நீரை அப்படியே திறந்து விடுகிறார்கள். எனவேதான், காலம் கடந்து, நாட்கள் பலவாகிக் காவிரியின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தின் வேதாரணியம் வட்டத்தைச் சேர்ந்த தாணிக் கோட்டகம் முள்ளியாற்றில் காவிரி நீர் காட்சியளிக்கிறது. மேலும், நாகை மாவட்டத்தில் குருக்கத்தி-வடக்கு வெளிக்கு வந்த காவிரி நீரை விவ சாயிகளும் மக்களும் மலரும் நெல் மணிகளும் தூவி வரவேற்றார்கள்.