சீர்காழி, ஜூன் 20- நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த அமர்நாத் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். தில்லியிலிருந்து, இவர் வியாழனன்று நள்ளிரவு அரசு பேருந்தில் திட்டச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் பேருந்தில் சோதனை நடத்தினர். அப்போது ராணுவவீரர் அமர்நாத் பயணம் செய்வதற்கான உரிய பாஸ் வைத்திருக்காமல் போலீசாரை எதிர்த்து வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இராணுவ வீரர் மீது உரிய பாஸ் இல்லா மல் வந்தது, போலீசாரிடம் வாதத்தில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து அமர்நாத்தை மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மருத்துவ மனையில் செய்யப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதால், அமர்நாத் சொந்த ஊரான திட்டச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.