தரங்கம்பாடி: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் பேரவை மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. என்.எஸ்.மாசேதுங் வரவேற்று பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் சிவராஜன் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் சீனி.மணி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், சிறு விற்பனையாளர் சங்க மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன்,ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு வாழ்த்தி உரையாற்றினர். தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து சம்மேளனத்தின் பொருளாளர் வீ.குப்புசாமி நிறைவுரையாற்றினார். சங்கத்தின் காளியாக்குடி பகுதி கிளை வேல்முருகன் நன்றி கூறினார். பேரவையில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாநாட்டு விளக்கப் பேரவை முன்னதாக சிஐடியு-வின் 16-ஆவது அகில இந்திய மாநாட்டு தீர்மான விளக்க பேரவை மாவட்டச் செயலாளர் சீனி.மணி தலைமையில் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் கே.விஜயன் தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார்.