tamilnadu

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.12- பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கடந்த 16 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த  ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்த நடத்தி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு கால த்தில் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்ப ங்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடுகின்றன. யாரி டமும் கடன் வாங்க முடியாத நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஊழியர்களின் அவல நிலை யைக் கவனத்தில் கொள்ளவில்லை. இந்நிலையில், பிஜேபி எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே, “போராடுகின்ற ஊழியர்கள் தேச துரோகிகள்” என்று பேசியிருக்கிறார். இதனைக் கண்டி த்தும், 16 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க  வலியுறுத்தி நாகப்பட்டினம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஜெ.அசோக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குரு சாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

;