tamilnadu

img

ஆதரவற்ற மனநலம் பாதித்தவரை காப்பகத்தில் சேர்க்க உதவிய காவல் அதிகாரி

நாகப்பட்டினம், மே 26- தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலப் பொ துச்செயலாளரும், அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட நிர்வாகியும் கிராம சுகாதார செவிலியருமான பா.இராணி, நாகை வட்டம், வடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருபவர்.  அண்மையில் இராணி, வடவூரிலிருந்து நாகை வரும் வழியில் புத்தூர் என்னும் இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நின்றிருப்பதைக் கண்டு, அவரை உற்றுக் கவனித்ததில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னு டன் மகப்பேறு உதவியாளராகப் பணியாற்றி மறைந்த ஆர்.ராஜம் என்பவரின் மகன் சீதாராமன் என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட சீதா ராமனுக்கு வேறு உறவினர் யாரும் இல்லை என்பதை அறிந்த இராணி, உடனடியாக நாகப்பட்டி னம், வெளிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ஆர்.விவேக் ரவி ராஜுக்குத் தகவல் தெரிவித்து, சீதாராமனை மனநலம் காப்பகத்தில் சேர்த்திட உதவிடு மாறு வேண்டினார்.

 மேலும், செய்தியறிந்த அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், காவல்துறை உதவி ஆய்வாளரிடம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்ள, உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் உடனடியாகச் செயலில் இறங்கி னார்.     தமிழ்நாடு அரசு மறுவாழ்வுத் துறை உதவியுடன்  செயல்பட்டு வரும், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் செயல்படும் கார்டன் மனநல மறு வாழ்வு மையத்தைத்  தொடர்பு கொண்டு பேசி, உடனடி ஏற்பாடுகள் செய்திடக் கேட்டுக் கொண்டார்.  திங்கட்கிழமை  மாலை, மறுவாழ்வு மைய நிர்வாகி ஜெயந்தி, வாகனத்துடன் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், கிராம சுகாதார செவிலியர் இராணி ஆகியோர் முன்னிலையில் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ், மனநலம் பாதித்த சீதாராமனை மறுவாழ்வு மைய நிர்வாகியிடம் ஒப்படைத்தார்.