tamilnadu

img

எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் அரசுக் கட்டடம்

சீர்காழி, ஆக.20- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தில் வி.ஏ.ஓ அலுவலகக் கட்டடம் உள்ளது. இக்கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. இக்கட்டிடத்தின் உள்புற மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தும், பக்கவாட்டில் உள்ள சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் மேற்கூரையின் வழியே கசிந்து உள்ளே வருவதால் இந்த கட்டிடத்திற்குள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இங்குள்ள ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த வி.ஏ.ஓ அலுவலகக் கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வி.ஏ.ஓ அலுவலகக் கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றவும், புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.