tamilnadu

img

அம்பேத்கர் அரசுப் பணியாளர் நலச் சங்க முப்பெரும் விழா

சீர்காழி, செப்.29-  நாகை மாவட்டம் சீர்காழியில் பாபாசா கேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசுப் பணியாளர்கள் நலச் சங்க முப்பெரும் விழா தென்பாதி ராஜேஸ்வரி திருமண மஹாலில் ஞான.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் ப.கபிலன் பி.புலவேந்திரன், பூமா.பரமேஸ்வரன், டி.ரவி, சி.தனபால், வி.இரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. தலைவராக ஞான.புகழேந்தி, செயலாளராக என்.எம்.பிரபு, பொருளாளராக பி.தமிழ்ச்செல்வன் ஆகிய மூவருக்கும் ஆசிரியர்கள் துறையூர் ராமலிங்கம், பெரியய்யா, இராமகிருஷ்ணன் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். இதில் கௌரவ தலைவர் மாசிலா. நெடுஞ்செழியன், துணைத் தலைவராக பி.சிவசங்கர், துணை செயலாளராக எஸ். இலக்கியமணி, மகளிர் அணி எம்.வசந்தி ஞானபிரகாசம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்தி பேசி சிறப்புரையாற்றினார். அம்பேத்கரில் சங்கமிப்போம் என்ற தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியனின் கருத்தரங்கமும், முனைவர் நன்னானே ரமேஷின் சமுதாய, பண்பாட்டு பாடல் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாசிலா. நெடுஞ்செழியன் விழாவை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நெறியாளராக இருந்து சிறப்புரையாற்றினார். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.