tamilnadu

img

எம்.செல்வராசை ஆதரித்து நாகையில் ஏஐடியுசி பரப்புரை

நாகப்பட்டினம், ஏப்.13-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசை ஆதரித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக, ஏஐடியுசி, தஞ்சை மாவட்டக் குழுவும் தஞ்சைத் தம்பி கலைக்குழுவும் இணைந்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல்பரப்புரை சுற்றுப்பயணம் செய்து வாக்குச் சேகரித்தனர்.கூட்டத்திற்கு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமை வகித்தார். சங்க மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.தில்லைவனம், சிபிஐ நாகை நகரச் செயலாளர் என்.கோபிநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் சங்க (ஏஐடியுசி) மாநிலஇணைப் பொதுச் செயலாளர் ஜே.குணசேகரன் ஆகியோர் பரப்புரையாற்றினர்.

;