tamilnadu

img

30 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களின் தாகம் தீர்க்கும் கிணறு

தரங்கம்பாடி, ஜூன் 2- நாகை மாவட்டம் பூம்புகார் அருகே மேலப்பெரும்பள்ளம் கிரா மத்தில் தூர்ந்து போன பழமையான கிணறு ஒன்றை 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஊராட்சி நிர்வாகம் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். பூம்புகாரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ள சின்னஞ்சிறு கிராமம் மேலப்பெரும்பள்ளம். நெல், பருத்தி, கிழங்கு வகைகள் போன்றவை விவசாயம் செய்து வந்த இக்கிராமத்தில் சுனாமி பேரழி வுக்கு பிறகு நிலங்களில் உப்புத் தன்மை கலந்ததால் விவசாயம்  பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள் ளதோடு பெரும்பாலும் பம்புசெட் மூலமாகவே நெல் உற்பத்தி மட்டுமே ஓரளவிற்கு செய்யப்படுகிறது.

மோட்டார், கைப்பம்புகள் மூலம் பெறப்படும் குடிநீர்த் தன்மை மாறி யுள்ளதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருவதால் தண்ணீருக்காக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் குறிப்பாக நடுத்தெரு, வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த மக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத  நிலை நீடித்ததை உணர்ந்த ஊராட்சி தலைவர் தேவி சுரேஷ்குமார் முயற்சியில் அப்பகுதியில் 1952-ல் அமைக்கப்பட்டு தூர்ந்துப் போன கிணறை தூர்வாரி சீரமைத் துள்ளனர். பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் குப்பை கிடங்கு போன்று கிடந்த கிணற்றை 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சீரமைத்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பின்னரும் சுத்த மான சுவையான குடிநீரை மக்க ளுக்கு வழங்க தயாராகி விட்ட கிணற்றை ஒவ்வொரு மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்ற னர்.  இது குறித்து ஊராட்சி தேவி சுரேஷ்குமார் கூறும்போது,  மக்களி டம் நீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தவும், மற்ற ஊராட்சிகளிலும் பயன்படாமல் உள்ள கிணறுகளை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வும் 30 ஆண்டுகள் பாழடைந்து கிடந்த கிணற்றை தூர்வாரி பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்றார். கிணற்றை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததால் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடையவுள்ளனர். நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்ந்து நீர் ஆதாரங்களை பாது காத்து, பராமரித்தால் தான் தண்ணீர் தேவை அனைத்து மக்களுக்கும் பூர்த்தியாகும். செ.ஜான்சன், தரங்கம்பாடி.