tamilnadu

பொன்னமராவதி மற்றும் பெரம்பலூர் முக்கிய செய்திகள்

கும்பகோணம், ஏப்.30-குடந்தையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக தின விழா தொடர் நிகழ்வாக நடைபெறுகிறது. திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் ஆர்.ராஜகோபாலன் தலைமை வகித்தார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி வாழ்க்கை வரலாறு நூல் அறிமுகம் செய்து தமுஎகச மாவட்ட குழு உறுப்பினர் சிவகுரு உரை நிகழ்த்தினார். அம்பேத்கர் நூல்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் அரங்க சுப்பையா உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி நன்றி கூறினார். நகரத் தலைவர் அனந்தசயனன், நகர செயலாளர் அசோக்குமார், ஓய்வூ தியர் சங்க ராமமூர்த்தி, பக்கிரிசாமி, வெங்கடேசன் உள்பட எழுத்தாளர்கள், வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

;