போடி, மே 28- தேவாரம் மீண்டும் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து தென்னை மரங்கள், மின் மோட் டார்களை சேதப்படுத்தி வருவதால் விவ சாயிகள் கவலையடைந்துள்ளனர். தேவாரம் பகுதியில் கேரள எல்லைப் பகுதியிலிருந்து வரும் ஒற்றை காட்டு யானை மக்னா உலாவருகிறது. கடந்த சில ஆண்டு களாக இந்த ஒற்றை காட்டு யானை தாக்கி பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கேரள வனப்பகு திக்கு சென்ற நிலையில் தேவாரம் பகுதி விவ சாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஒற்றை காட்டு யானை மீண்டும் தேவாரம் பகுதிக்கு வந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக இந்தப் பகுதி களில் பயிர் செய்யப்பட்டுள்ள தென்னை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. வியா ழக்கிழமை அதிகாலை தேவாரம் மூனாண்டி பட்டி அருகே 18-ஆம் கால்வாய் கரைப் பகுதி யில் ராஜேந்திரன் மற்றும் ஜெகதீஸ்குமார் ஆகிய விவசாயிகளின் தென்னந்தோப்பில் புகுந்த காட்டு யானை தென்னை, மரவள்ளி கிழங்கு ஆகியவற்றை சேதப்படுத்தியது. மின் மோட்டார், மணல் பில்டர் ஆகிய வற்றையும் சேதப்படுத்தி சென்றுவிட்டது. காட்டுயானை வராமல் இருந்த நிலை யில் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட் டங்களில் தங்கி தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளையும் தயக்கமின்றி செய்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக காட்டுயானை நடமாட்டம் அதிகரித்துள்ள தால் விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வர அச்சமடைந்துள்ளனர்.