tamilnadu

ஆண்டிபட்டி, சின்னமனூரில் திருட்டு

தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சுப்புலாபுரத்தைசேர்ந்தவர் முருகன் கோழி கடை வைத்துள்ளார். மனைவி விவசாயம் செய்து வருகிறார். ஞாயிறன்று பகலில் வீட்டை பூட்டிசாவியை அங்கு குளிக்கும் அறையில் வைத்து விட்டு இருவரும்வேலைக்குச் சென்று விட்டனர். மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கம்மல்,மோதிரம், ரூ.8,500 ஆகியவற்றை அடையாளம் தெரியாதநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சின்னமனுார்: திருநகரை சேர்ந்த ஷேக்முஹமது கடந்தவாரம் மதுரை சென்று விட்டார். இவரது வீட்டின் பூட்டை உடைத்துஉள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் எட்டரை பவுன்நகையை திருடிச் சென்றுவிட்டனர்.

================

நீர்மட்டம்

பெரியாறு-126.35அடி நீர் வரத்து 1331 கன அடி, திறப்பு 1200கன அடி. வைகை- 61.45அடி நீர்வரத்து 1325 கன அடி, திறப்பு 972 கன அடி.மஞ்சளாறு- 41.70 அடிநீர்வரத்து 125 கன அடி, திறப்பு இல்லை. சோத்துப்பாறை-113.36 அடி நீர்வரத்து 328 கன அடி, திறப்பு மூன்று கன அடி. மழையளவு மில்லி (மீட்டரில்): போடி-4.4, கூடலூர்-12.5, மஞ்சளாறு-4, பெரியகுளம்-4, பெரியாறு அணை-43, தேக்கடி-12.6, உத்தமபாளையம்-7, வைகை-1.
 

;