தேனி , ஆக.11- நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் முல்லைப் பெரியாறு, வைகை அணை களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும், கேரளா விலும் தாமதமாகத் தொடங் கிய தென் மேற்குப் பருவ மழை தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழையாகக் கொட்டி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் பெய்து வரும் கன மழையால் அந்த மாவட் டம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உயர்ந் துள்ளது. கடந்த நான்கு நாட்க ளில் மட்டும் அணையின் நீர் மட்டம் 12 அடி உயர்ந்துள் ளது.சனிக்கிழமை காலை யில் அணைக்கு 8,818 கன அடி தண்ணீர் வந்தது .மாலை யில் அது 6800 கன அடி யாகக் குறைந்தது. அணை யில் இருந்து 1,200 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இந்தத் தண் ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு போக வைகை அணையில் நிரப்பப்படு கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோரப் பகுதி மக்க ளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 71 அடி உயர முள்ள வைகை அணையின் நீர் மட்டம் தற்போது 34.19 அடியாக உள்ளது. அணை க்கு வினாடிக்கு 1,361 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 562 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறு- 43.2, தேக்கடி- 96, கூடலூர்- 8, சண்முகா நதி அணை- 5, உத்தம பாளையம்- 2, வீரபாண்டி- 12, வைகை அணை- 1, மஞ்ச ளாறு- 3, சோத்துப்பாறை- 3, கொடைக்கானல்- 6.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.