tamilnadu

img

கருப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 3- அமெரிக்காவில் நிறவெறிகொண்ட காவல் அதிகாரியின் முழங்காலால் நெரிக் கப்பட்டு மூச்சுத் திணறி கருப்பின இளை ஞர் ஜார்ஜ் பிலாய்ட் உயிரிழந்தார். இந்த கொடூர கொலையைக் கண்டித்தும், அமெ ரிக்கா கருப்பின மக்களை சமமாக நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலா ளர் எஸ்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. ராஜப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன், கே.செல்வராஜ், தங்கப்பாண்டி, செல்லத்துரை, நாகராஜ், கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;