தேனி, மே 25- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 41.88 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலை யில் அணையில் இருந்து மதுரை மாநக ரம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்க ளுக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத் தில் வைகை ஆற்றில் அமைக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழி யாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு வைகை அணையில் உறை கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தர விட்டுள்ளது. அதன்படி திங்களன்று மாலை 6 மணிமுதல் வைகை அணை யில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து வைகை நுன்புனல் நீர்மின் நிலையம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக சீறிபாய்ந்து வெளியேறியது. வைகை அணையில் இருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. முதல் நாளான திங்க ளன்று வினாடிக்கு 1500 கனஅடியும், இரண்டாவது நாளில் 850 கனஅடி யாக குறைக்கப்பட்டு, 3 வது நாளில் 300 கனஅடியாக குறைக்கப்பட்டு வருகிற 28ந்தேதி மாலை 6 மணி யுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப் படும். இந்த 3 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட உள் ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயி ரக்கணக்கான குடிநீர் உறைகிணறு களில் நீர்மட்டம் பெருகும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்த னர்.