கடமலைக்குண்டு, ஆக.30- மயிலாடும்பாறை அருகே கருப்பையாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே சுக் கான் ஓடையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. புதிய பாலம் கட்டப்பட்டதால் அதன் அருகே மின்மாற்றி அமை ந்துள்ள இடம் மேடான பகுதியாக மாறியது. தற்போது மின்மாற்றி கைகளால் தொடும் அளவுக்கு அபாயகரமாக உள்ளது. ஏதேனும் விபத்துகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை வேறு இடத் திற்கு மாற்ற செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.