தேனி, ஜூலை 6- தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தை திறக்கக் கோரியும், நோய் தொற்று பொது முடக்க காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா நோய் தொற்றால் காந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீதி மன்றங்களுக்கு முடப்பட்டுள்ளன. இதனால் பல வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளது. தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு தலர்வுகளுடன் அனைத்து அலுவலங்களும் திறந்து செயல்பட்டு வரும் நிலையில் தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் உள்ள அனைத்து நீதி மன்றங்களையும் திறந்து வழக்காடுவதற்கு உத்தரவிடவேண்டும். கொரோனா நோய்த்தொற்று பொது முடக்கதால் வாழ்வாதாரத்தை இழந்த தமிழகம், பாண்டிசேரியில் உள்ள வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியில் இருந்து தலா ஒரு லட்சரூபாய் வழங்க வேண்டும். சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் இரண்டு அப்பாவிகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையாக செயல்படாத கீழமை நீதிமன்ற நீதித்துறை நடுவர் மற்றும் அரசு மருத்துவர் ஆகியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் கூட்டமைப்பிற்கு கொரோனா நிதியாக 50 கோரி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.