tamilnadu

துணை முதல்வர் மாவட்டத்தில் சமூகப்பரவலானது கொரோனா

தேனி, ஜூன் 27-  தேனியில் கொரோனா தொற்று சமூக பர வலாகி குழந்தைகள், காவல்துறையினரின் குடும்பத்தினர் என இரண்டு நாளில் 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை 47 பேர் பாதிக்கப்பட்டி ருந்தனர். சனிக்கிழமை மாலை நான்குமணி வரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மாலை நான்குமணி நில வரப்படி பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ,போடி காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவல் ஆய்வாளர் ஒருவரின் மனைவி, இரண்டு மகள்களுக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பழனி செட்டிபட்டியை சேர்ந்த 44 வயது நபர், கொத் தப்பட்டியை சேர்ந்த 31 வயது பெண், மணி யக்காரன்பட்டியை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. கம்பத்தைச் சேர்ந்த 27 வயது பெண், விசுவாசபுரம், போடேந்திரபுரத்தை சேர்ந்த தலா ஒருவர், இ.புதுக்கோட்டை கக்கன்ஜி காலனியை சேர்ந்த 53 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது .பெரியகுளம் அருகே கைலாச பட்டி, சரோஜினி நாயுடு தெருவை சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை, 34 வயது ஆண், தென்கரையைச் சேர்ந்த 55 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய் யப்ட்டுள்ளது. போடி நகராட்சி காலனியை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் என 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 535 ஆக அதிகரித்துள் ளது.