tamilnadu

கஞ்சா கடத்திய  5 பேர் கைது

 தேனி, மே 20- கம்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய 5 பேரை கைது செய்த காவ ல்துறையினர், அவர்களிடமிருந்து 180 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகிறார்கள். கம்பம் வடக்கு காவல்துறையினர் கம்பம் மணிக்கட்டி ஆலமரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியே வந்த பிக்கப் வாக னத்தை நிறுத்திய போது வாகன ஓட்டு நர் தப்பி ஓடிவிட்டார் .பின்னர் வாக னத்தை சோதனை செய்த போது அதில்  9 சாக்கு பைகளில் 180 கிலோ கஞ்சா இரு ந்தது தெரியவந்தது. விசாரணை நடத்தி யதில் கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் விலைக்கு வாங்கி வந்ததும், மலையடி வாரத்தில் பதுக்கி, பின்னர் கேரளா விற்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது.  வாகனத்தில் வந்த சின்னமனூரை சேர்ந்த சுகப்பிரியா, முத்துசெல்வம், சந்தோஷ், கம்பத்தை சேர்ந்த சுவாதி, ஈஸ்வரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய செல்லக் காளி, ஜெயக்குமார் ஆகி யோரை தேடி வருகிறார்கள்.

;